நடிகர் சிம்பு தற்போது தனது 48வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கி கமல்ஹாசனின் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
சிம்பு சமீபகாலமாக தனது கேரியரில் சிறப்பாக வருவதால், மக்கள் இந்தப் படத்தைப் பற்றி மிகவும் உற்சாகமாக உள்ளனர். கமல்ஹாசனுடன் தக் லைஃப் (Thug Life )என்ற மற்றொரு படத்திலும் நடிக்கிறார்.
முதன்முறையாக சிம்பு கமல் ஹாசனுடன் இணைந்து நடிப்பதால் அந்த காம்போவை திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள். இதற்கிடையே சிம்புவுக்கு இன்னமும் திருமணம் நடக்காமல் இருக்கிறது. அவருக்கு எப்போது திருமணம் நடக்கும் என்றும் அவரது ரசிகர்கள் கேள்விகளை தொடர்ந்து கேட்டுவருகிறார்கள்.
மேலும் படிக்க :
நடிகர் சிம்புவின் திருமணக் கேள்வி : ரசிகர்கள் காத்திருக்கும் பெரிய நிகழ்வு 🎉❤️
சூழல் இப்படி திருமணமானவர்கள் தங்கள் உறவில் நிலைத்திருப்பது குறித்து சிம்பு சில ஆலோசனைகளை கூறியுள்ளார்.
எஸ்.டி.ஆர் என்று அழைக்கப்படும் சிம்பு, சிறிது காலம் படங்களில் நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்தார். ஈஸ்வரன் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார்
பின்னர் அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடித்தார், அது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சிம்புவின் நடிப்பையும், வெங்கட் பிரபுவின் இயக்கத்தையும் ரசிகர்கள் விரும்பினர், மேலும் படம் நூறு கோடி ரூபாய் வசூலித்து கெத்து காட்டியது.
பிறகு சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல என்று இரண்டு படங்களில் நடித்தார். வெந்து தணிந்தது காடு மிகவும் பிரபலமானது மற்றும் மக்கள் சிம்புவின் நடிப்பை விரும்பினர்.சூழல் இப்படி இருக்க
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு தற்போது தனது 48வது படத்தில் நடிக்க உள்ளார்.
STR 48: என்று அழைக்கப்படும் இந்தப் படத்தை கமல்ஹாசனின் நிறுவனம் தயாரித்துள்ளது. எஸ்.டி.ஆர் (சிம்பு) ரசிகர்கள் இதை தேசிங்கு பெரியசாமி கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எஸ்டிஆர் ரசிகர்களிடம் இருக்கிறது.
இந்தப் படத்திற்காக செம ஃபிட்னஸுடன் பணியாற்றும் சிம்பு, அதற்காக தாய்லாந்து மற்றும் லண்டனில் தற்காப்புக் கலைகளையும் கற்றுக்கொண்டார்.
இந்நிலையில் மெட்ரோ படத்தில் நடித்த கிரிஷ் திருமணத்தில் சிம்பு கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், "திருமணமான பிறகு பெண்களை அவரது தந்தையைப் போல் ஒரு ஆண் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே போன்ற தங்களின் தந்தையை பார்த்துக்கொள்வதுபோல் ஆணை பெண்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்றார்.
மேலும் படிக்க :
இளையராஜாவாக நடிக்கும் தனுஷ் | இசைஞானி வாழ்க்கை வரலாறு படமாகவிருக்கிறது.

0 கருத்துகள்